Monday, April 10, 2017

மேகம் நான் ! தேவதை நீ ! சுயநல காதல் !!

மேகம் நான் !  தேவதை நீ !  சுயநல காதல் !!
=============================================

வானில் மிதப்பேன்
விமானம் அல்ல !
காற்றினால் அலைக்கழிக்கப்படுவேன்
சளைத்தவன் அல்ல !
சூரியன் உரிந்த நீரை சேமிப்பேன்
கள்வன் அல்ல !
இரக்கமில்லா கல் நெஞ்சன்
வெகுவிரைவில் கலங்குபவன் அல்ல !

காய்ந்த பயிர்களும்
கரைந்த குளங்களும்
வாடிய பூமியும்
வாய்க்காத விவசாயமும்
நிறைந்த சோகமும்
நிறையாத வயிறும்
கண்டு
உள்ளம் உவந்து கண்ணீர் சிந்தினேன்
மழையாக !!

பூமி தழைக்க தொடங்கிய தருணம்

மழையும் நின்று போனது
என் காதல்தேவியின் கண்களில் பட்டு,
அவள் கண்ணீராகி போனதால் !!

நீரின்றி அமையாது உலகெனினும்
அவள் கண்ணீர் துடைக்கும் சுயநலமிக்கதன்றோ
என் காதல் :(

கண்ணீர்

கண்ணீர்
==========

அன்று நீ அழ, எதற்கோ !
கண்ணீர் துடைக்க நானிருந்தேன் ..

இன்று நான் அழ, உன்னால் !
கண்ணீர் துடைக்க யாருண்டோ !!

அன்று

அன்று
=======

அன்று
துடைக்க முடியவில்லை
துடைக்க மனமும் இல்லை
இருப்பதில் பெருமை இல்லை
துடைத்தாள் மறைவதும் இல்லை
எனதாடையில் படிந்த மலமே !!

இன்று
நீ மறைந்தும், மணப்பதேனோ என்னாடை !!

நான் மறைந்தாலும் உன்னை மறவேனோ

நான் மறைந்தாலும் உன்னை மறவேனோ
============================================

தனிமை வெறுத்தால்
துணையாய் நின்றேன் !!

கட்டி அழுதாள்
காதல் மலர்ந்தேன் !!

சிமிட்டிய கண்களில்
சிலிர்த்து போனேன் !!

சிரித்து பேசினால்
சிதைந்து போனேன் !!

போதும் போதும் தொலைந்துவிடு என்றால்
மீதம் என்ன மாய்ந்தே போவேனோ !!

உடலை மண் தின்னுமடி
ஆயினும் உயிர் உன்னை நாடுமடி
நான் மறைந்தாலும், உன்னை மறவேனடி, கண்மணியே !!

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...