Friday, May 12, 2017

கவிஞர் வாலி

கவிஞர் வாலி
===============

பத்மஸ்ரீ
கலைமாமணி
வாலிப வாலி

நீ பாட்டிக்கும் கவி எழுதுவாய்
பல பார்ட்டிக்கும் கவி எழுதுவாய்
உன் எழுத்து - அக்காலத்து கிழவிக்கும் பொருந்தும்
இக்காலத்து குமரிக்கும் பொருந்தும் !!

கவிஞன் பேசுவதில்லை
பேசுகையில் பொருளில்லை
பொருள் இருப்பினும் நகை இல்லை
இவை யாவும் உள்ளவனுக்கு
அழகில்லை நடிப்பதுமில்லை
நீர் எங்கிருந்தய்யா வந்தீர் !!

நீ மறைந்தாலும்
உன் மறையாத சொத்துக்களை  (எழுத்துக்களை)
என் சொத்தை பற்கள் மொச்சை கொட்டும் (தாளம் கொட்டும்) !!

உன் எழுத்தில் வகை உண்டு
பேச்சில் நகை உண்டு
நடிப்பில் சுவை உண்டு
அழகில் மிகை உண்டு
முகத்தில் புண் நகை உண்டு
மற்றவர்களிடம் பகை உம் உண்டு
(திறமைக்கேற்ற திமிர்)

உன்னை கண்டு வியந்து எழுத கற்ற என்னை
உன் நினைவு நாளுக்கு எழுத வைத்துவிட்டாயே !!

என்றென்றும் வாலி

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...