Thursday, July 6, 2017

இது போதும் எனக்கு இது போதுமே



சூரியன் இமை மூட துடிக்கும் நேரம்
என் பக்கம் கொஞ்சம் தென்றல் வீசும்
காற்றில் மிதக்கும் கடலின் வாசம்
கடலின் ஓசை காதுகளில் கொஞ்சி பேசும்
அலைகள் எனது கால்கள் தழுவ, பாதம் கூசும்

இது போதும் எனக்கு இது போதுமே 

எது யாருடையது ?? இது யாருக்கு சொந்தம் ?? புரியா விடை ??



துடிக்கிறது என் இதயம்
உன் நெஞ்சில் !!  (இந்த இதயம் யாருக்கு சொந்தம்)

சிந்திக்கிறது என் மனம்
உன் நினைப்பில் !! (இந்த மனம் யாருக்கு சொந்தம்)

கேட்கிறது உன் குரல்
என் காதுகளில் !!

உறங்குகிறது உன் ஆத்மா
என் கனவுகளில் !!

விழுகிறது என் பார்வை
உன் கண்களில் !!

ஏறுகிறது என் தாலி
உன் கழுத்தில் !!

வாழ்கிறது எந்தன் உயிர்
உன் வயிற்றில் !!

கழிகிறது என் வாழ்க்கை
உன் மகிழ்வில் !!

என்னுள் ஓர் மாற்றம்

தலை வருகிறேன்
அங்கே சில வெள்ளை முடிகள் எட்டி பார்த்து பல் இளிக்கின்றது !!

பல் துலக்குகிறேன்
அங்கே ஒரு கருத்த பல் ஒளிந்து கொண்டு கண்ணடிக்கிறது !!

இளையாரோடு உரையாடுகிறேன்
எந்தன் உதடுகள் அறிவுரை கூற துடிக்கின்றது !!

நான் எழுத முற்படுகிறேன்
என் எண்ணங்களிலும் கற்பனைகளிலும் முதிர்ச்சி வெளிப்படுகிறது !!

தமிழ் பாடல்கள் கேட்கிறேன்
அதன் இசை மறந்து, பாடல் வரிகளை ரசிக்கிறேன் !!

என்னுள் ஏன் இந்த மாற்றமோ !!

Tuesday, July 4, 2017

நட்பு - பிள்ளையார் சுழி


எம் தேன் கூட்டினுள் பிளவொன்று வருமெனில்
அது பகைமையினால் ஒருபோதும் அல்ல
தேனின் அதீத சுவையின் திகட்டலால் !!

இக்கவிதையினை யாம் படைத்ததனால்
எம் நட்பு முறிவுண்டு முடிந்தென்று நினைத்தீரோ !!

இக்கவி எம் நட்பின் முற்றுப்புள்ளி அல்ல
யாமிட்ட பிள்ளையார் சுழி !!


Cigarette

இருண்ட வானம் விடிகிறது
விடிந்த வானம் மறைகிறது
அன்பே நான் உன்னை சுவாசிக்கயில் !!

உன்னை மறக்க முடியவில்லை
கைவிட மனமுமில்லை

என் துணைவிக்கோ
உன்னை பிடிக்கவில்லை
உன்னால் என்னையும் பிடிக்கவில்லை

என் மனமோ உன்னை நாடுதடி
பகலில் கூட உன்னை கண் தேடுதடி !!

உன்னை மறவேனோ
அன்றி நான் மறைவேனோ !!

அவள் என்னை கடந்து செல்கயில்

அவள் என்னை கடந்து செல்கயில்
====================================

இருண்ட வானம் விடிகிறது !
விடிந்த வானம் மறைகிறது !

வாரிய தலை கலைகிறது !
முறுக்கிய மீசை வளைகிறது !
கட்டிய வேட்டி அவிழ்கிறது !
வாயில் சுருட்டு அணைகிறது !

நாட்கள் பல, நான் காத்து கிடக்க !
என் நிழல், என்னை மறந்து உன்னோடு செல்வதேனோ !!

அன்பே நீ என்னை கடந்து செல்கையில் !!

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...