GOA - திரும்பி பார்கிறேன் - இன்றோடு 1 வருடம்
==================================================
==================================================
கோவா வெளிநாடு என்பதறியாமல்
இந்திய மாநிலம் என்று நினைத்திருந்தேன்
எங்கு காணிலும் வெள்ளையர்கள் !!
ஊர் முழுவதும் குறுகிய சாலைகள் !!
அங்கே இரு சக்கர வாகனங்களில் பறந்து செல்லும்
ஜோடி இளம்சிற்றுக்கள் !!
அவர்களை துரத்தி செல்லும்
நம்மூர் இளங்காளைகள் !!
(அது நாங்கள் அல்ல :P)
அங்கே இரு சக்கர வாகனங்களில் பறந்து செல்லும்
ஜோடி இளம்சிற்றுக்கள் !!
அவர்களை துரத்தி செல்லும்
நம்மூர் இளங்காளைகள் !!
(அது நாங்கள் அல்ல :P)
ஊர் எங்கும் கடற்கரைகள் !!
அங்கே துள்ளி விளையாடும்
ஜோடி வெள்ளை புறாக்கள் !!
அதை மொய்க்கும் ஆயிரம் கண்கள் !!
(அதில் முப்பது கண்கள் எங்களுடையது ;))
சூரியனின் இளம் வெப்பத்தில்
மெல்லிய மழைச்சாரல் !!
பசுமை காடுகளை கொண்ட
சிறு சிறு மலைகள் !!
மலை சரிவில்
அழகிய குன்றுகள் !!
குன்றுகளை தோற்றுவிக்க
மிதமாக அலையடிக்கும் கடல் !!
கடல் அலையில் புரண்டு
விளையாடும் குழந்தைகள் !!
(விளையாடுவது குழந்தைகள் மட்டுமா :P)
எங்கு காணிலும் குட்டை கால் சட்டை
அணிந்த வடஇந்திய பெண்கள்
பளிங்கு தொடையுடன் !!
துறவிகளே வாய் பிழந்தாலும்
ஆச்சர்யபடுவதற்கில்லை !!
(பிரம்மனின் படைப்பே படைப்பு :D)
கோவாவில் பெண்கள் அழகாக இருக்கிறார்களா
அல்லது அழகான பெண்களே கோவாவுக்கு வருகிறார்களா
என்ற சந்தேகமும் ஓடுகிறது !!
ஊரெங்கு தேடியும் இல்லை
தேநீர் நிலையங்கள் !!
பெட்டி கடையில் கூட பீர் பாட்டில்கள்
வாட்டர் பாட்டில்களை விட மலிவு விலையில் !!
(என்ன கொடும சரவணா இது)
உலகம் சுற்றுகிறது என்பதை
கோவாவில் தான் ஒப்புக்கொண்டேன் !!
மின்சாரம் இல்லாவிடிலும் கூட
24 மணி நேரமும் சலிக்காமல் சுற்றுகிறது !!
(எந்த கடையில் மது அருந்தியதோ :P)
இரவு 2 மணிக்கு மறையும் சூரியன்
மதியம் 1 மணிக்கே உதிக்கிறது !!
(என்னே ஒரு விந்தை)
வெள்ளையனை வெளியேற்றினான் காந்தி
கோவாவை மட்டும் ஏன் விட்டுவைத்தானோ !!
மீண்டும் செல்ல காத்திருக்கும்
- அர. பாலகிருட்டிணன் (R. Balakrishnan)
- அர. பாலகிருட்டிணன் (R. Balakrishnan)
No comments:
Post a Comment