பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் காதல் வேண்டி விண்ணப்பம்
=================================================================
இனிய மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் !!
உன் அழகிய முகம் மலர்ந்த தாமரை மலரோ !
மலரின் அழகை கண்ட மயக்கத்தில்
நீ மலர்ந்த நாள் மறந்து போவேனோ !
மலரோடு நம்முறவும் இணைந்தினிந்து மலர்ந்திடுமோ !
அன்றி நீ மலர்ந்து, நான் மெலிந்து மாய்ந்திடுவேனோ !
நம் காதல் வளர்பிறையாய் வளர்ந்திடுமோ !
அன்றி என் உயிர் தேய்பிறையாய் தேய்ந்திடுமோ !
நாம் மலைவாழ் பறவையாய் சிறகடித்து பறந்திடுவோமோ !
நான் மட்டும் சிறகொடிந்து வீழ்ந்துடுவேனோ !
நாம் குயில் போல் ஒரு குரலில் இசைந்திடுவோமோ !
அன்றி நான் மட்டும் குரலிழந்து சோர்ந்திடுவேனோ !
உன் விழிகளால் விழித்திட
உன் உதடுகளால் புன்னகைத்திட
உன் மூச்சினால் சுவாசித்திட
உன் நாவினால் சுவைத்திட
உன் முகமாய் மலர்ந்திட
உன் நினைவாய் நெகிழ்ந்திட
உன் இதயமாய் துடித்திட
எனக்கு வரமொன்று கிடைத்திடுமோ !
அன்றி செய்த தவம் போதாது பரிதவித்திடுவேனோ !
அன்றி இறுதிவரை தவமிருந்து மடிந்திடுவேனோ !
இரு விழிகளில் ஓர் பார்வையாய்
இரு கரங்களில் ஓர் வணக்கமாய்
இரு மூக்கினில் ஓர் சுவாசமாய்
இரு செவிகளில் ஓர் ஒலியாய்
இரு உயிர்களில் ஓர் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட, என் இதயமொன்று !
தகிட தகிட துடிக்குதடி இருமடங்கு !
என்றென்றும் நீ வேண்டுமென்று !
=================================================================
இனிய மலர்ந்த நாள் வாழ்த்துக்கள் !!
உன் அழகிய முகம் மலர்ந்த தாமரை மலரோ !
மலரின் அழகை கண்ட மயக்கத்தில்
நீ மலர்ந்த நாள் மறந்து போவேனோ !
மலரோடு நம்முறவும் இணைந்தினிந்து மலர்ந்திடுமோ !
அன்றி நீ மலர்ந்து, நான் மெலிந்து மாய்ந்திடுவேனோ !
நம் காதல் வளர்பிறையாய் வளர்ந்திடுமோ !
அன்றி என் உயிர் தேய்பிறையாய் தேய்ந்திடுமோ !
நாம் மலைவாழ் பறவையாய் சிறகடித்து பறந்திடுவோமோ !
நான் மட்டும் சிறகொடிந்து வீழ்ந்துடுவேனோ !
நாம் குயில் போல் ஒரு குரலில் இசைந்திடுவோமோ !
அன்றி நான் மட்டும் குரலிழந்து சோர்ந்திடுவேனோ !
உன் விழிகளால் விழித்திட
உன் உதடுகளால் புன்னகைத்திட
உன் மூச்சினால் சுவாசித்திட
உன் நாவினால் சுவைத்திட
உன் முகமாய் மலர்ந்திட
உன் நினைவாய் நெகிழ்ந்திட
உன் இதயமாய் துடித்திட
எனக்கு வரமொன்று கிடைத்திடுமோ !
அன்றி செய்த தவம் போதாது பரிதவித்திடுவேனோ !
அன்றி இறுதிவரை தவமிருந்து மடிந்திடுவேனோ !
இரு விழிகளில் ஓர் பார்வையாய்
இரு கரங்களில் ஓர் வணக்கமாய்
இரு மூக்கினில் ஓர் சுவாசமாய்
இரு செவிகளில் ஓர் ஒலியாய்
இரு உயிர்களில் ஓர் வாழ்வாய்
வாழ்வாங்கு வாழ்ந்திட, என் இதயமொன்று !
தகிட தகிட துடிக்குதடி இருமடங்கு !
என்றென்றும் நீ வேண்டுமென்று !
No comments:
Post a Comment