Wednesday, October 12, 2016

உயிர் சேர்த்தால் என் இதயத்தில்

இரவு மறைந்து போகும்
இருளில் உன்னை காண முடியாமல் !!
சூரியன் இரவை கொன்று உதிக்கும்
உன் அழகை தரிசிக்க !!
மரம் நிழல் தந்து சூரியனை மறைக்கும்
உன் மீது அனலடித்தால் !!
காற்று புயலடித்து மரத்தை சாய்க்கும்
உன் மீது இலைகள் உதிர்ந்தால் !!
மலை காற்றை மறைக்கும்
உன் கண்களில் தூசி பட்டால் !!
மழை மலையை சரிக்கும்
நீ உயரம் கண்டு பயந்தால் !!
குகை குடை கொடுக்கும்
உன்னை மழை நனைத்தால் !!

அது குகையல்ல என் இதயம்
உன்னை காத்தது என் இதயமல்ல
உயிரற்ற இதயத்தில் புகுந்து
உயிர் சேர்த்து என்னை
நீ காத்தாயடி !!


- அர. பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...