Wednesday, October 12, 2016

சுயனலவாதியாகிய நான்

சுயனலவாதியாகிய நான்
========================

மின்னுகிறது கர்நாடகத்தின் அழகு
என் முகத்தில் மட்டும்
என்ன செய்வேன்

காவிரியை உரிமை கொண்டாடும்
கர்நாடகத்தின் கோர தாண்டவத்தால்

என் தமிழர்கள் தாகம்
  தணியாமல் தவிக்க !!
பயிர்கள் பழுத்து
  காய்ந்து மடிய !!
விவசாயிகள் பசியால்
  சுருக்கில் உயிர் மாய்க்க !!
எனது தாய் நீதிமன்றம் தவறாமல்
  காவிரி அன்னைக்காக போராட !!
கர்நாடக தமிழர்கள்
  கர்நாடகத்தினரால் தாக்கப்பட !!

நான் மட்டும்
ஏதும் அறியாதவனாய்
கர்நாடக மங்கையின் நளினத்தில் மயங்கி
கர்நாடகத்தை போற்றி துதி பாடும்
சுயநலவாதியாகி போனேனடி கண்ணே !!

No comments:

Post a Comment

விக்ரம் சார் - ஒரு கத சொல்லட்டா

ஒரு ஊர்ல - தாழ்ந்த நிலமுண்டு நிலமோ வளமன்று விழுந்ததோர் விதைத்துண்டு விதையிலோ பெண் சிசுக்கன்று துளிர்விட்டது பல கனவுகள் கண்டு கனவை நன...